பிரித்தானிய அரசாங்கத்தின் மெத்தனபோக்கு – உயிரிழக்கும் கைதிகள்!
பிரித்தானிய சிறைச்சாலைகளில் தீவிபத்துகள் காரணமாக ஏராளமான கைதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெரிசல் மிகுந்த சிறைச்சாலைகளில் சட்டப்படி தேவைப்படும் தானியங்கி தீ கண்டறியும் அமைப்புகள் (AFDs) இல்லாத காரணத்தால், இவ்வாறான தீ விபத்துகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027-ஆம் ஆண்டுக்குள் அனைத்து சிறை அறைகளையும் தீ பாதுகாப்பு மிக்கதாக மாற்றும் தனது உறுதிப்பாட்டை நீதி அமைச்சகம் கைவிட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 21,000-க்கும் மேற்பட்ட சிறைச்சாலைகளில் இன்னும் அடிப்படை தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறை அறைகளில் ஏற்படும் தீ விபத்துகள் 124 சதவீதம் அதிகரித்து, ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





