உலகம்

டொனால்ட் ட்ரம்பை மீண்டும் அதிபராக்க ஆசைப்படும் அமெரிக்க மக்கள்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,  மற்றும் (Ron DeSantis)  டிசாண்டிஸ் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில்  என்பிசி வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இதில் 51% வாக்காளர்கள் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதிக்கான முதன்மைத் தேர்வாக டிரம்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர், 22% பேர் மட்டுமே டிசாண்டிஸைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

குடியரசுக் கட்சியின் முதன்மை வாக்காளர்களில் டொனால்ட் டிரம்ப் தனது போட்டியாளரான Ron DeSantis ஐ விட 29 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 7 வீதமானோர்   மைக் பென்ஸைத் தேர்ந்தெடுத்துள்ளதுடன், நான்கு வீதமானோர் நிக்கி ஹேலியை தெரிவு செய்துள்ளனர்.

டொனால்ட் ட்ரம்பின் வீட்டில் இரகசிய ஆவணங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறி அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு சுமத்தியதை தொடர்ந்து குறித்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

“வரலாற்றில் முதன்முறையாக, முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அவருடைய நிலைப்பாட்டில் அது தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான அடையாளத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று இந்த ஆய்வை நடத்திய குடியரசுக் கட்சியின் கருத்துக்கணிப்பாளர் பில் மெக் இன்டர்ஃப் கூறியுள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content