பொழுதுபோக்கு

“வி” எழுத்து நடிகருக்கு விழுந்த பேரிடி… பாரிலேயே விழுந்து கிடக்கும் பரிதாபம்

வெளியே சிரித்து நடித்தாலும் இந்த முறை ஏற்பட்ட படுதோல்வியை அந்த வி நடிகரால் ஜீரணிக்கவே முடியவில்லை என பகீர் தகவல்கள் கசிந்துள்ளன. அந்த படம் தோல்வியை தழுவியதில் இருந்தே பாரிலேயே அதிக நேரத்தை செலவழித்து வருகிறாராம்.

அழகில் எந்தவொரு குறையும் இல்லை என்றாலும் நாம தான் கெத்து என்கிற திமிர்த்தனம் அதிகமாகவே அந்த நடிகருக்கு இருப்பது தான் அவரால் வெற்றியை ருசிக்க முடியாமல் போக காரணம் என சினிமா வட்டாரத்திலேயே பலரும் பேசி வருகின்றனர்.

அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு தவறான ஆலோசனைகள் காரணமாக சரியான படங்களை தேர்வு செய்யாதது தான் அந்த நடிகரின் சரிவுக்கு காரணம் என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

படப்பிடிப்பு நாட்களில் அதிகமாக நடிகைகளுடன் சகவாசம் வைத்துக் கொண்டு சரியாக நடிப்பில் கவனம் செலுத்தாமல் வீணடித்து வருவதும் அந்த நடிகர் படங்கள் படமாக உருவாகும் போதே பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது என்கின்றனர்.

ஜாலியாக இருக்க மட்டுமே ஆசைப்படும் அந்த நடிகர் ரிஸ்க் எடுத்து மற்ற நடிகர்கள் போல லுக் எல்லாம் மாற்றி கடுமையான உழைப்பை போட்டு நடிப்பதை அதிகம் விரும்புவதில்லை. அதனாலே அவரது படங்களை பார்க்க ரசிகர்களும் விரும்புவதில்லை எனக் கூறுகின்றனர்.

சினிமாவில் படத்துக்கு படம் நடிகர்கள் வித்தியாசம் காட்டி கடுமையாக உழைத்து வருகின்றனர். அப்படியே கேரவனில் எப்படி ஏசி போட்டு ஜாலியாக இருக்கிறாரோ அதே போல ஷூட்டிங் ஸ்பாட்டிலும் கொஞ்சம் கூட வியர்த்து விடக் கூடாது என்கிற கொள்கையுடன் நடித்து வந்தால் பின்னர் வெற்றி எப்படி தேடி வரும் என சக நடிகர்களே கலாய்த்து வருகிறார்களாம்.

இந்த முறையாவது ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவரும் படத்தை கொடுத்து கம்பேக் கொடுக்கலாம் என நினைத்த நடிகருக்கு படுதோல்வி படமாக புதிய படம் மாறிய நிலையில், பாரிலேயே டெண்ட் போட்டு குடித்தனமே செய்து வருகிறார் அந்த இளம் நடிகர் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

இனிமேல் புதிய படங்களில் நடித்தாலும் இதே நிலைமை தான் ஏற்படும். அதற்கு ஏன் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டும் என தனது மேனேஜரிடமே அழுது புலம்பி நடிகர் பேசியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அடுத்த படத்தின் கதையை முழுமையாக தானே கேட்டு தேர்வு செய்து நடிக்கவும் நடிகர் திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content