ஆசியா

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் : வடகொரியாவின் அதிரடி நடவடிக்கை!

வடகொரியா நேற்று (18.07) அதிகாலை  கிழக்கு கடற்கரையில், இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது.

சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு முதல் முறையாக தென் கொரியாவில் உள்ள துறைமுகத்திற்கு அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா கொண்டு வந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, கோபத்தின் வெளிப்பாடாக வட கொரியா ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது.

இதன்படி பியோங்யாங்கின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள தளத்தில் இருந்து இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது.

இந்த ஏவுகணைகள் சுமார் 550 கிலோமீட்டர் வரை பற்ததாக தென்கொரிய இராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஓஹியோ-வகுப்பு பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலான யுஎஸ்எஸ் கென்டக்கி, செவ்வாயன்று தென் கொரிய துறைமுகமான பூசானுக்கு வந்தடைந்ததை அடுத்து, கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்