இலங்கை

வானிலை மாற்றம் : பல பகுதிகளில் வெப்பநிலை உயர்வு!

  • April 25, 2026
  • 0 Comments

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (25) பிற்பகல் 03.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (26) முதல் அமலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டத்தின் சில பகுதிகளில், வெப்பக் குறியீடு  பகல் நேரத்தில் “கணிசமான” அளவு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு […]

இலங்கை

21 மாவட்டங்களில் உச்சம் தொடும் வெப்பம்!

  • April 17, 2026
  • 0 Comments

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று ( 17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவுறுத்தலின்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்திலும் இந்த வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பச் சுட்டெண் (Heat Index) அதிகரிப்பதன் காரணமாக, நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு அதிக உடல் […]

இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

  • March 30, 2026
  • 0 Comments

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் மேல் மற்றும் சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் […]

இலங்கை

பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • March 27, 2026
  • 0 Comments

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்றும் வறட்சியான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், வவுனியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் […]

இலங்கை

சுட்டெரிக்கும் வெயில்: இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

  • March 26, 2026
  • 0 Comments

இலங்கையின் பல பாகங்களில் இன்று (26) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இந்த அதீத வெப்பம் உணரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் போதியளவு நீர் அருந்தி உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்குமாறும், தேவையற்ற கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் மேலதிக […]

இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

  • February 22, 2026
  • 0 Comments

இலங்கைக்கு அருகில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று (22) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் […]

இலங்கை

சீரற்ற காலநிலை – மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

  • November 26, 2025
  • 0 Comments

நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 877 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எழுவர் காயமடைந்துள்ளனர். மண்சரிவு , மரம் முறிவு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களாலேயே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 4 வீடுகள் முழுமையாகவும், 250 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. சீரற்ற காலநிலையால் 33 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேர் மூன்று தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, அடுத்து சில நாட்களுக்கு சீரற்ற காலநிலை […]

இலங்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை – மூன்று பேர் உயிரிழப்பு!

  • October 21, 2025
  • 0 Comments

இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு சீரற்ற வானிலை குறித்த சிவப்பு எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை மற்றும் இயற்கை பேரழிவுகளால்  மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 144 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக பேராதனை, ருவன்வெல்ல மற்றும் தம்புத்தேகம ஆகிய இடங்களைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகியுள்ளனர். இதேவேளை மகா ஓயா மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுக்கைக்கு அருகில் […]

இலங்கை

இலங்கையின் பல இடங்களில் மின் துண்டிப்பு!

  • October 5, 2025
  • 0 Comments

இலங்கை மின்சார வாரியத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டம் மற்றும் நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 30,000இற்கும் மேற்பட்ட மின்துண்டிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிற்சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக மின் தடைகளை மீட்டெடுப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தொழிற்சங்க நடவடிக்கை 31 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க கூறியுள்ளார். அரசாங்கம் சரியான முறையில் பதிலளித்தால், உடனடியாக மின் தடைகளை மீட்டெடுக்க முடியும் […]

error: Content is protected !!