உலகம் செய்தி

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறுத்தியது இத்தாலி!

  • April 14, 2026
  • 0 Comments

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு இத்தாலி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இத்தாலி பிரதமர் இன்று (14) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியான உறவுகள் முடங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தாலியின் இந்த கொள்கை மாற்ற முடிவானது மேற்காசியாவில் நிலவும் பதற்றமான போர் சூழலுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படுகின்றது. 2003 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட மேற்படி பாதுகாப்பு ஒப்பந்தமானது 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டுவருகின்றது. எனினும், இஸ்ரேலின் போர் நடவடிக்கை […]

உலகம் செய்தி

மேற்காசிய போரால் பிரிட்டன் பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு!

  • April 14, 2026
  • 0 Comments

மேற்காசிய போரால் பிரித்தானியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச நாணய நிதியம் International Monetary Fund (IMF) எச்சரிக்கை விடுத்துள்ளது. போர் சூழ்நிலையால் ஏற்பட்ட எரிசக்தி விலை உயர்வானது ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளைவிட பிரித்தானியாவிலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வளர்ச்சி எதிர்பார்ப்பு கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், இந்த போர் உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. குறிப்பாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை அதிகரிக்கும்போது மத்திய […]

உலகம் செய்தி

ஈரானில் 270 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு!

  • April 14, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையால் தமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை மதிப்பிடும் பணியை ஈரான் ஆரம்பித்துள்ளது. ஈரானின் அரச ஊடகங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன. ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் சுமார் 270 பில்லியன் டாலர்வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. கட்டிடச் சிதைவுகள் மற்றும் தொழிற்சாலை முடக்கத்தால் ஏற்பட்ட வருமான இழப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொகை கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைகளில் போர் சேதம் தொடர்பில் […]

உலகம் செய்தி

மீண்டும் அமைதி பேச்சு! பாகிஸ்தான் கூறுவது என்ன?

  • April 14, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான அமைதி பேச்சு மீண்டும் நடைபெறக்கூடும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் Khawaja Asif நம்பிக்கை வெளியிட்டார். அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. இந்நிலையில் கடந்த 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சு நடைபெற்றது. இது தோல்வியடைந்தையடுத்து ஈரான் துறைமுகங்கள்மீதான முற்றுகை எச்சரிக்கையை ட்ரம்ப் வெளியிட்டார். இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பாகிஸ்தான் […]

செய்தி

துறைமுக முற்றுகை ஆபத்தானது: அமெரிக்காவை விளாசித் தள்ளுகிறது சீனா!

  • April 14, 2026
  • 0 Comments

ஈரான்மீதான அமெரிக்காவின் துறைமுக முற்றுகையை சீனா வன்மையாகக் கண்டித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது என சீன வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட இந்த முற்றுகை, தற்போதைய தற்காலிக போர்நிறுத்தத்தை சீர்குலைக்கும் என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஈரானிடமிருந்து அதிகப்படியான கச்சா எண்ணெயைப் பெறும் சீனா, சர்வதேச சந்தை மற்றும் பொருளாதார நிலைத்தன்மை கருதி இந்த மோதல் முடிவுக்கு வர வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.

இலங்கை செய்தி

புத்தாண்டில் ஜனாதிபதி செய்த ‘புதுமை’!

  • April 14, 2026
  • 0 Comments

டித்வா சூறாவளியினால் சேதமடைந்த நிலையில், அரசாங்கத்தின் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மீள நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்றார். அநுராதபுரம் – கல்நேவ பிரதேச செயலகப் பிரிவின் மல்பெலிகல கிராமத்தில் எச்.எம். இந்திரஜித் சம்பத் சேனாரத்னவின் புதிய வீட்டிலேயே இந்நிகழ்வு இடம்பெற்றது. முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டின் கீழ், ஐந்து மாத காலப்பகுதிக்குள் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளதுடன், கல்நேவ பிரதேச செயலாளர் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக நிர்மாணிக்கப்படும் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை திறப்பு: ராஜதந்திர முயற்சிக்கு ஆஸ்திரேலியா ஆதரவு!

  • April 14, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதில் தமது நாடு அதிக ஆர்வம் காட்டிவருகின்றது என ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் Richard Marles தெரிவித்தார். உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியைச் சீரமைக்க குறித்த நீரிணை கட்டாயம் திறக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கான சர்வதேச இராஜதந்திர முயற்சியில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற கூட்டணி நாடுகளுடன் இணைந்து செயல்பட ஆஸ்திரேலியா தயாராக உள்ளது. எனினும், பிராந்தியத்தில் நிலவும் போரில் ஒரு நிரந்தர […]

உலகம் செய்தி

‘துறைமுக முற்றுகை’ ஈரானின் இறையாண்மையை மீறும் செயல்!

  • April 14, 2026
  • 0 Comments

ஈரான் துறைமுகங்கள்மீதான அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கையானது இறையாண்மை மீறும் செயல் என ஐ.நாவுக்கான ஈரான் தூதுவர் Amir saeid iravani சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிடுவதற்குரிய ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கையை ஐ.நாவுக்கான ஈரானியத் தூதுவர் கடுமையாக எதிர்த்துள்ளதுடன், இது சர்வதேசக் கடல்சார் சட்டங்களை மீறும் செயல் எனவும் ஐ.நா. சபையில் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை, இந்த முற்றுகை ஏனைய நாடுகளின் கப்பல்களையும் பாதிக்கும் என்பதால், கடற்பயண […]

உலகம் செய்தி

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்துமாறு வலியுறுத்தி New York நகரில் போராட்டம்: பலர் கைது!

  • April 14, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவி உடன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி நியூயார் New York நகரில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். செனட்டர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் திரண்ட எதிர்ப்பாளர்கள், காசா மற்றும் லெபனான் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு முழக்கமிட்டனர். திங்கட்கிழமை நடைபெற்ற மேற்படி போராட்டத்தில் செல்சி மேனிங் போன்ற முக்கிய நபர்கள் கலந்துகொண்ட நிலையில், சுமார் 93 தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலுக்கான ஆயத விற்பனை நிறுத்தப்பட வேண்டும் எனவும் […]

விளையாட்டு

இன்று களமிறங்குகிறார் தோனி?

  • April 14, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் Chennai Super Kings , Kolkata Knight Riders ஆகிய அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். 4 போட்டிகளில் ஆடியுள்ள CSK 1 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அதேபோல 4 போட்டிகளில் விளையாடியுள்ள Kolkata Knight Riders 3 தோல்வி , 1 ஆட்டம் மழையால் ரத்தால் புள்ளிப்பட்டியலில் கடைசி […]

error: Content is protected !!