இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்துமாறு வலியுறுத்தி New York நகரில் போராட்டம்: பலர் கைது!
இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவி உடன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி நியூயார் New York நகரில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செனட்டர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் திரண்ட எதிர்ப்பாளர்கள், காசா மற்றும் லெபனான் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு முழக்கமிட்டனர்.
திங்கட்கிழமை நடைபெற்ற மேற்படி போராட்டத்தில் செல்சி மேனிங் போன்ற முக்கிய நபர்கள் கலந்துகொண்ட நிலையில், சுமார் 93 தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலுக்கான ஆயத விற்பனை நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.




