லெபனான் விவகாரத்தில் ட்ரம்பின் உத்தரவுக்கு அடங்காத நெதன்யாகு!
லெபனானுடன் போர்நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், அதனை பொருட்படுத்தாது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்திவருகின்றது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போர் நிறுத்த விதிமுறையை இஸ்ரேல் பிரதமர் மீறுகின்றார் என லெபனான் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் நெதன்யாகு தன்னிச்சையாகச் செயல்படுவதாக அரசியல் ஆய்வாளர் Emma Shortis சுட்டிக்காட்டியுள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தங்கள் காகித அளவில் மட்டுமே இருப்பதாகவும், களத்தில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, சர்வதேச தலையீடுகள் நெதன்யாகுவின் போர் வியூகங்களை மாற்றுவதில் தற்போது தோல்வியடைந்துள்ளன என்பது தெளிவாகிறது எனவும் மேற்படி அரசியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.





