உலகம் செய்தி

பொருளாதார உறவை வலுப்படுத்த ஆஸ்திரேலியா, சீனா இணக்கம்!

  • April 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi மற்றும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong ஆகியோர், பீஜிங்கில் சந்தித்து பேச்சு நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய வர்த்தக முறையைப் பாதுகாப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தைவான் விவகாரத்திற்குத் தீர்வு காண்பது மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் அரசியல் சூழல்கள் […]

செய்தி விளையாட்டு

இமாலய இலக்கை இலகுவில் எட்டிய ஹைதராபாத் அணி!

  • April 30, 2026
  • 0 Comments

ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 41ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கிடையிலான ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 44 பந்துகளில் சதம் விளாசிய அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேக சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையைப் […]

இலங்கை செய்தி

புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் திறன் சான்றிதழ் வழங்க கோரிக்கை!

  • April 29, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் மற்றும் நியூசிலாந்து தூதரகத்தைச் சேர்ந்த இலங்கைக்கான முறைசாரா குடியேற்றத் தொடர்பு அதிகாரி சோனியா டக்ளஸ் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (29) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. சர்வதேச புலம்பெயர்வு தகவல் மையத்தின் ஏற்பாட்டில் இதற்குரிய சந்திப்பு இடம்பெற்றது. முறைசாரா புலம்பெயர்வினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து […]

உலகம் செய்தி

பயங்கரவாதத் தாக்குதலா? விசாரணை வேட்டை தீவிரம்!

  • April 29, 2026
  • 0 Comments

லண்டன் Golders Green பகுதியில் யூதர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத சம்பவமா என பொலிஸார் விசாரணை வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர். தாக்குதலை நடத்திய 45 வயது சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த இரு ஆண்கள் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. 30 மற்றும் 70 வயது மதிக்கத்தக்க இரு ஆண்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர் எனவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்குதல் நடத்தியவரின் பின்னணி மற்றும் […]

உலகம் செய்தி

லண்டனில் பயங்கரம்: யூதர்கள்மீது கத்திக்குத்து தாக்குதல்!!

  • April 29, 2026
  • 0 Comments

வடக்கு லண்டனில் யூத சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். தாக்குதல் நடத்திய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் யூத எதிர்ப்பு வன்முறைச்சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள சூழலிலேயே இத்தாக்குதலும் இடம்பெற்றுள்ளது. தாக்குதல்களின் பின்னணியில் ஈரானியத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. மேற்படி தாக்குதல் சம்பவத்தை பிரிட்டன் பிரதமர் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது பயங்கரவாதத் தாக்குதலா என்பது பற்றி தகவல் […]

இலங்கை செய்தி

ஹட்டனில் கோர விபத்து: ஒருவர் பலி! 27 பேர் படுகாயம்!!

  • April 29, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் பகுதியில் தனியார் பஸ்ஸொன்று சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இருவர் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா , போடைஸ் பிரதான வீதியில் பட்டல்கலை பாலத்திற்கு அருகாமையிலேயே இன்று பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ்ஸொன்றே, மற்றொரு பஸ்ஸிற்கு வழிவிட முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த இவ்வாறு […]

உலகம் செய்தி

துப்பாக்கி ஏந்திய புகைப்படத்துடன் ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப்!

  • April 29, 2026
  • 0 Comments

ஈரான் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இனியும் தான் நல்லவராக இருக்க முடியாது எனவும் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ட்ரூத் பக்கத்தில் பொதுவாக எழுத்து மூலமாக தனது கருத்துகளைத் முன்வைக்கும் ட்ரம்ப், இம்முறை புகைப்படம் ஒன்றையும் இணைந்துள்ளார். குண்டுகள் வெடிக்கும் பின்னணியில், கையில் அதிநவீன துப்பாக்கியுடன் திரைப்பட கதாநாயகன் போல் ட்ரம்ப் அதில் காட்சியளிக்கின்றார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதல்சுற்று […]

உலகம் செய்தி

ஈரானில் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

  • April 29, 2026
  • 0 Comments

போர் தொடங்கிய காலத்திலிருந்து ஈரானில் குறைந்தபட்சம் 21 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் தரவுகளின் அடிப்படையில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் உளவாளிகளுக்கு எதிராக ஈரான் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதே காலகட்டத்தில் ஈரானில் 4,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானிய அதிகாரிகளின் இத்தகைய கொடூரமான அடக்குமுறைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வன்மையாகக் கண்டித்துள்ளார். போர் சூழலுக்கு மத்தியிலும் […]

இலங்கை செய்தி

மலையக மக்களின் அறவழிப் போராட்டத்துக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு!

  • April 29, 2026
  • 0 Comments

“நாம் நீலகாமம்” அற வழிப் போராட்டத்துக்கு நாமும் எமது முழு பங்களிப்பை வழங்குவோம் – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொழும்பில் எதிர்வரும் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் சிறிதரன் எம்.பி. மேலும் கூறியவை […]

உலகம் செய்தி

நேட்டோ அமைப்பின் அவசியத்துவத்தை வலியுறுத்திய மன்னர்!

  • April 29, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் நேட்டோ கூட்டணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு நோட்டோ உதவவில்லை என ட்ரம்ப் விமர்சித்துவருகின்றார். குறித்த அமைப்பை காகிதப் புலி எனக்கூட விளாசித் தள்ளி இருந்தார். இந்நிலையிலேயே நேட்டோவுக்கு ஆதரவாக மன்னர் குரல் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலுக்குப் பிறகு நேட்டோவின் பாதுகாப்பு ஒப்பந்தம் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய மன்னர், தற்போதைய சவாலான உலகச் சூழலில் இந்த ஒற்றுமை அவசியம் என்பதையும் […]

error: Content is protected !!