உலகம் செய்தி

ஈரானுக்கு எதிரான புதிய ராணுவ திட்டம்: ட்ரம்புக்கு விளக்கமளிப்பு!

  • April 30, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான புதிய இராணுவத் திட்டங்கள் தொடர்பில் அமெரிக்காவின் மத்திய கட்டளை பணியகத்தின் தளபதி CENTCOM commander, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு விளக்கமளிக்கவுள்ளார் என தெரியவருகின்றது. பெரும்பாலும் இன்று இதற்குரிய சந்திப்பு இடம்பெறும் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுடனான போர்ச்சூழலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தற்போது ராஜதந்திர முயற்சிகளில் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுவருகின்றது. இது கைகூடாத பட்சத்தில் பாரிய ராணுவ நடவடிக்கைமூலம் போரை முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும் பரிசீலிக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே சாத்தியமான புதிய ராணுவ […]

இந்தியா செய்தி

பெங்களூருவில் அடை மழை: சுவர் இடிந்து விழுந்து எழுவர் பலி!

  • April 30, 2026
  • 0 Comments

இந்தியா, பெங்களூருவில் நேற்று மாலை பெய்த ஆலங்கட்டி மழையால் பவுரிங் வைத்தியசாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். பெங்களூருவில் கடந்த இரு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பலத்த இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கிருஷ்ண ராஜபுரம், ராஜாஜி நகர், மெஜஸ்டிக், ஹெப்பால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மாலை 7 மணி வரை கொட்டிய மழையால் ஆங்காங்கே சாலையோர […]

உலகம் செய்தி

யூதர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இஸ்ரேல் வலியுறுத்து!

  • April 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் யூதர்களுக்கு எதிராகத் தொடர்ந்து அதிகரித்து வரும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. வெறும் கண்டனங்கள் மட்டும் போதாது என்றும், யூத சமூகத்தைப் பாதுகாக்க உறுதியான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அவசியம் என்றும் இஸ்ரேல் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவில்வாழும் யூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பிரித்தானிய அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் இஸ்ரேல் […]

ஆஸ்திரேலியா செய்தி

“பேசத் தெரியாத பிஞ்சு… எங்கே போனாளோ? – தேடித் தவிக்கும் ஆஸ்திரேலியா!

  • April 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் காணாமல் போன 5 வயது சிறுமியை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், காணாமல் போன சிறுமி தனது சகோதரியின் மகள் என்பதை ஆஸ்திரேலிய செனட்டர் Jacinta Nampijinpa Price உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் ‘ஓல்ட் டைமர்ஸ்’ (Old Timers Camp) முகாமில் உள்ள வீட்டில் சிறுமி ஷரோன் உறங்க வைக்கப்பட்டார். அன்று இரவு 11.30 மணியளவில் ஜெபர்சன் லூயிஸ் (Jefferson Lewis) என்பவருடன் அந்தச் சிறுமி கைகோர்த்துச் […]

விளையாட்டு

ஆர்.சி.பி., குஜராத் அணிகள் இன்று மோதல்!

  • April 30, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று நடைபெறும் 42 ஆவது லீக் ஆட்டத்தில் Royal Challengers Bengaluru மற்றும் Gujarat Titans ஆகிய அணிகள் மோதவுள்ளன. அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். குஜராத் அணி, இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்று தலா 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று உள்ளது. கடந்த ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்திய உற்சாகத்தில் அந்த அணி களமிறங்குகிறது. பெங்களூரு […]

உலகம் செய்தி

“Golders Green தாக்குதல் பயங்கரவாதச் செயல்”

  • April 30, 2026
  • 0 Comments

லண்டன் Golders Green பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் பயங்கரவாதச் செயல் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த யூத சமூகத்தை சேர்ந்த இருவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். அவர்களின் நிலைமை தற்போது சீராக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அதேவேளை, யூத சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகின்றது என யூத சமூகத்தினர் வலியுறுத்தியுள்ளனர். பிரித்தானியப் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர், குறித்த “யூத எதிர்ப்புத் தாக்குதல்” முற்றிலும் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்ததுடன், […]

இலங்கை செய்தி

பிரான்ஸ் விரைகிறது சிஐடி குழு? நடக்கப்போவது என்ன?

  • April 30, 2026
  • 0 Comments

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் CID ஷானி அபேசேகர Shani Abeysekera உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் குழு ஒன்று, பிரான்சுக்குப் பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான, புலனாய்வு முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தக் குழு பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது வெளிநாட்டில் வசித்து வரும், பிள்ளையானின் முன்னாள் பேச்சாளரான அசாத் மௌலானாவிடம் விசாரணை நடத்துவதே அவர்களின் இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகக் கருதப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் […]

உலகம் செய்தி

பொருளாதார உறவை வலுப்படுத்த ஆஸ்திரேலியா, சீனா இணக்கம்!

  • April 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi மற்றும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong ஆகியோர், பீஜிங்கில் சந்தித்து பேச்சு நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய வர்த்தக முறையைப் பாதுகாப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தைவான் விவகாரத்திற்குத் தீர்வு காண்பது மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் அரசியல் சூழல்கள் […]

செய்தி விளையாட்டு

இமாலய இலக்கை இலகுவில் எட்டிய ஹைதராபாத் அணி!

  • April 30, 2026
  • 0 Comments

ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 41ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கிடையிலான ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 44 பந்துகளில் சதம் விளாசிய அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேக சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையைப் […]

இலங்கை செய்தி

புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் திறன் சான்றிதழ் வழங்க கோரிக்கை!

  • April 29, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் மற்றும் நியூசிலாந்து தூதரகத்தைச் சேர்ந்த இலங்கைக்கான முறைசாரா குடியேற்றத் தொடர்பு அதிகாரி சோனியா டக்ளஸ் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (29) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. சர்வதேச புலம்பெயர்வு தகவல் மையத்தின் ஏற்பாட்டில் இதற்குரிய சந்திப்பு இடம்பெற்றது. முறைசாரா புலம்பெயர்வினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து […]

error: Content is protected !!