சிறைச்சாலை கலவரங்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – சஜித் விசனம்
சிறைச்சாலைகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பாதுகாப்பற்ற நிலைமை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (07) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், யார் என்ன தெரிவித்தாலும் இது தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும். அத்துடன் சிறைச்சாலைகளில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்களை அடிப்படையாகக்கொண்டு, நாங்கள் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவந்தோம். அதில் அமைச்சருக்கு […]





