மத்திய கிழக்கை சூழ்ந்த போர் மேகம்: உலக நாடுகள் உஷார்!
ஈரான்மீதான தாக்குதலையடுத்து மத்திய கிழக்கில் உள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளன. ஈரான், இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் உள்ள தமது பிரஜைகளை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஆஸ்திரேலியா அறிவுறுத்தியுள்ளது. வுணிக விமானங்கள் கிடைக்கும்போதே அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வான்வழித் தாக்குதல்கள் மற்றும் வான்வெளி மூடப்படுவதால் ஏற்படக்கூடிய விமானப் போக்குவரத்து இடையூறுகள் குறித்து ஆஸ்திரேலியா கவலை வெளியிட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் நிலையற்ற பாதுகாப்பு சூழல் காரணமாக அத்தியாவசியப் பொருட்களைச் […]












