பொழுதுபோக்கு

கேரளாவில் தஞ்சமடைந்து காதலனை கரம்பிடித்தார் மோனலிசா!

  • March 12, 2026
  • 0 Comments

மகா கும்பமேளாவில் பாசிமணி மாலை விற்ற – தனது காந்த கண்களால் பிரபலமான மோனலிசா தனது காதலனை கரம்பிடித்துள்ளார். பெற்றோரின் எதிர்ப்புக்கு மத்தியில் காவல்நிலையம்வரை சென்றே அவர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். மகா கும்பமேளாவில் வீதி வீதியாக பாசிமணி மாலை விற்றுக் கொண்டிருந்தவர்தான் இந்த மோனலிசா. பாசிமணி வாங்கலியோ என கூவி விற்றுக் கொண்டிருந்த மோனலிசாவின் காந்த கண்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி ஒரே நாளில் பிரபலமானார். இதை தொடர்ந்து அவருடன் செல்பி எடுக்க ஏராளமான இளைஞர்கள் […]

இந்தியா செய்தி

இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கிய ஈரான்!

  • March 12, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் Hormuz நீரிணை வழியாக இரு இந்திய சரக்கு கப்பல்கள் பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. ஈரான்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், துபாயில் இருந்து குஜராத் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த தாய்லாந்து எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும்போது ஏவுகணை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து ஈரான் வெளிவிவகார அமைச்சருடன், இந்திய […]

இலங்கை செய்தி

‘இராஜதந்திர சேவை’ – ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு உயர்குழு ஒப்புதல்!

  • March 12, 2026
  • 0 Comments

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்ட  தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் 10  பேரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு நியமிக்கப்படும் நபர்களின் தகைமைகளை பரிசோதிக்கும் இக்குழுவின் அனுமதியைத் தொடர்ந்து, அவர்கள் தத்தமது இராஜதந்திரப் பணிகளைப் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் பதவிகள் குறித்த விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன: […]

இலங்கை செய்தி

சுரேஷ் சாலேமீது 3 குற்றச்சாட்டுகள்: 25 பக்க அறிக்கை நீதிமன்றில் முன்வைப்பு!

  • March 12, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வு சேவைவியின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, Major General Suresh Sale மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நேற்று மேற்படி தகவலை வெளியிட்டனர். இது தொடர்பில் 25 பக்க அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வவுணதீவில் இரண்டு காவல்துறையினரின் கொலைகள் மற்றும் சாய்ந்தமருது குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, […]

இலங்கை செய்தி

மல்லாவியில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

  • March 12, 2026
  • 0 Comments

மல்லாவியில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். வயலை பார்க்க சென்ற போதே நேற்று (11) மாலை இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துணுக்காய் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான திருநாவுக்கரசு கிருபாகரன் (55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான பரிசோதகராக கடமை ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .

இலங்கை செய்தி

யாழில் 6 சந்தேக நபர்களின் சொத்துகள் முடக்கம்!

  • March 12, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிதி மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு , பிணையில் விடுவிக்கப்பட்ட 06 சந்தேக நபர்கள் , வழக்கு தவணைகளுக்கு முன்னிலையாகாத நிலையில் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி பிணையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் வழக்கு தவணைகளுக்கு முன்னிலையாக நிலையில் அவர்களுக்கு எதிராக திறந்த பிடியானைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவர்கள் வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காது தொடர்ந்து தலைமறைவாக உள்ளமையால் , பொலிஸாரினால் […]

இலங்கை செய்தி

“ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குக’! – சுமந்திரன்

  • March 12, 2026
  • 0 Comments

“தமிழகத்தில் நீண்ட காலம் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகள் தங்களுக்கு அங்கேயே வாழ்வுரிமையும் குடியுரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அதை நாங்களும் வரவேற்று ஆதரிப்போம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் M.A. Sumanthiran தெரிவித்திருக்கின்றார். புதுடில்லியில் நேற்று மாலை வின்ட்ஸர் பிளேஸில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச நிறுவனத்தின் நாளந்தா மண்டபத்தில் ‘முகம் இல்லா மனிதர்கள் – இந்தியாவில் தமிழ் அகதிகளின் பயணம்’ என்ற […]

உலகம் செய்தி

18 ட்ரோன்களை இடைமறித்து அழித்தது சவூதி!

  • March 12, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் Saudi Arabia கிழக்குப்பகுதியில் ஊடுருவிய பதினெட்டு ஆளில்லா விமானங்களை drones வெற்றிகரமாகத் தடுத்து அழித்தாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சவூதியை நோக்கி வான்வழித் தாக்குதல் முயற்சிகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக, ஷேபா எண்ணெய் வயலை இலக்கு வைத்துச் சென்ற ஒரு ட்ரோன் வடக்கு எல்லைப்பகுதியில் இடைமறித்துத் தகர்க்கப்பட்டது. சவூதி பாதுகாப்புப் படைகளின் இந்த அதிரடி நடவடிக்கையானது நாட்டின் முக்கிய எரிசக்தி வளங்களைப் பாதுகாப்பதில் உள்ள உறுதியைக் காட்டுகிறது என […]

உலகம்

போர்ச் சூழல்: மத்திய கிழக்கு சுற்றுலாத்துறைக்கு பேரிழப்பு!

  • March 12, 2026
  • 0 Comments

போர்ச் சூழலால் மத்திய கிழக்கின் சுற்றுலாத்துறை நாளொன்றுக்கு 600 மில்லியன் டொலர்வரை பேரிழப்பை சந்தித்து வருகின்றது என தெரியவருகின்றது. the World Travel and Tourism Council (WTTC) மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. வான்வழிப் போக்குவரத்து முடக்கம் மற்றும் சர்வதேசப் பயணிகளின் வருகை குறைவு ஆகியவையே இதற்கான முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. வான்வெளி மூடப்பட்டதால் கே.எல்.எம் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் தங்களின் விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன. பாதுகாப்பு சார்ந்த நெருக்கடிகள் நீங்கிய […]

இலங்கை செய்தி

“‘என் பிள்ளை அருகில் இருக்க வேண்டும்’ – நிறைவேறாத இறுதி ஆசை: தமிழர் தாயகத்தில் தொடரும் சோகம்!

  • March 12, 2026
  • 0 Comments

கடந்த 31 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தோப்பூர்-மூதுரைச் சேர்ந்த, கதிர்காமத்தம்பி சிவகுமார் என்பவரின் ஒரே உறவான சுப்பிரமணியம் கமலாதேவி ((வயது-79) , புற்றுநோயினால் உயிரிழந்துள்ளார். தாய்-தந்தை, குடும்பம்-உறவு என எவருமற்ற தனது தம்பியை தான் வாழும் காலத்திலேயே சிறை மீட்டுவிட வேண்டும் என்று அயராது பாடுபட்டு வந்த அவரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சகோதரனின் விடுதலைக்காக அல்லும் பகலும் அரசதிகாரத்திடம் மன்றாடி மனமுடைந்து,  புற்றுநோயின் பாதிப்பிற்கு ஆளாகி […]

error: Content is protected !!