யுரேனியம் கொண்ட ஏவுகணையை ஏவிய ரஷ்யா : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
கடந்த மாதம் செர்னிஹிவ் (Chernihiv) மாகாணத்தில் ரஷ்யா ஏவிய குறைக்கப்பட்ட யுரேனியம் கொண்ட ஏவுகணையிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சியின் அளவு அதிகரித்துள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) குறிப்பிட்டுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய சுகாதார அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தரையில் ஏதேனும் சிதைவுகளையோ அல்லது வெடிக்காத வெடிமருந்துகளையோ கண்டால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு SBU வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே நேட்டோவிற்கான ஆதரவு செலவீனங்கள் சமமாக பகிரப்படவில்லை என அதன் தலைவர் மார்க் ரூட்டே குற்றம் சாட்டியுள்ளார். […]




