வெனிசுலாவில் களமிறங்கிய 1600 வெளிநாட்டு மீட்புக் குழுக்கள்
வெனிசுலாவில் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு சுமார் 1600 வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் வருகை தந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்குள் நுழைவதற்கான அனுமதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவின் பிரபலமான இடமான லா குவைராவில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் 14,000 இராணுவ மற்றும் காவல்துறை உறுப்பினர்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




