வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள் (Dansal) தொடர்பான பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அன்னதானங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள தரப்பினர், அது குறித்து அந்தந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கு அறியப்படுத்தி, பதிவுகளை மேற்கொள்ளுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி. பொரலெஸ்ஸ கேட்டுக்கொண்டுள்ளார். இதன்போது, அன்னதானம் நடத்தப்படும் இடம் மற்றும் அது எவ்வகையான என்பது குறித்த விபரங்களை உரிய அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். […]




