சிறைச்சாலை கலவரம் தொடர்பில் புலனாய்வு தகவல் முன்கூட்டியே கிடைத்ததா?
நீர்கொழும்பு சிறைச்சாலையில் வன்முறையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எந்தவித உளவுத் தகவல்களும் கிடைக்கபெறவில்லை என பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவங்களை மையப்படுத்தி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், சிறைச்சாலைகளுக்கு புலனாய்வு பிரிவினரிடமிருந்து இவ்வாறான உளவுத் தகவல்களை கிடைப்பது வழமை எனவும், எனினும் இந்த தாக்குதல் தொடர்பில் எவ்வித முன்னறிவிப்புகளோ […]




