ஐரோப்பா செய்தி

உக்ரைனின் 376 ட்ரோன்களை அழித்த ரஷ்ய வான் படை!

  • June 6, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் பிரதான நகரங்களில் ஒன்றான St Petersburg மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், முக்கிய எண்ணெய் கிடங்கும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் , 376 உக்ரைனிய ட்ரோன்களை இடைமறித்து அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சென் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சூழ்ந்துள்ள Leningrad பிராந்தியத்தில் மாத்திரம் 140 இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அப்பிராந்திய ஆளுநர் Aleksandr Drozdenko உறுதிப்படுத்தியுள்ளார். […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் செயலுக்கு ஈரான் கடும் கண்டனம்!

  • June 6, 2026
  • 0 Comments

லெபனான் ராணுவத்தினர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஈரான் வெளிவிவகார அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது. இஸ்ரேல் வேண்டுமென்றே லெபனானின் இறைமையையும் பாதுகாப்பையும் சீர்குலைக்க முயற்சிப்பதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர்Esmaeil Baghaei பகாவி குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதல் லெபனானின் அமைதி மற்றும் செழிப்பிற்கு எதிரான ஒரு தெளிவான ஆக்கிரமிப்புச் செயல் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கும் லெபனான் அரசுக்கும் ஈரான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

உலகம் செய்தி

மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேறிகள் வன்முறை: பாலஸ்தீனம் கடும் கண்டனம்!

  • June 6, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள ஹுவாரா Huwara நகரில் இஸ்ரேலிய குடியேறிகளால் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலை பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்தத் தாக்குதலில் பல குடியிருப்பாளர்கள் காயமடைந்ததுடன், நகராட்சி கட்டடங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேலிய இராணுவத்தின் பாதுகாப்போடு இந்த அத்துமீறல்கள் நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டும் பாலஸ்தீனம், இது மக்களைத் தங்கள் சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றும் முயற்சி என்று குறிப்பிடுகிறது. காசா போரின் பின்னணியில் இத்தகைய ராணுவ மற்றும் குடியேறிகளின் வன்முறைகள் […]

இலங்கை செய்தி

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் சுரேஷ் சலே!

  • June 6, 2026
  • 0 Comments

குற்றப்புலனாய்வுப் பிரிவினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் உதய கம்மன்பில மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். தடுப்புக்காவலில் தமக்கு இழைக்கப்படும் அநாகரிகமான, சித்திரவதைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று இரவு முதல் சுரேஷ் சாலே உணவு, நீர் மற்றும் மருந்துகளை முற்றாக மறுத்து, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். […]

செய்தி விளையாட்டு

ஈரான் அணி நிர்வாகிகளுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு

  • June 6, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ணக் கால்பந்து தொடரில்   பங்கேற்கவுள்ள ஈரான் தேசிய கால்பந்து அணியின் முக்கிய பின்னணி நிர்வாகிகளுக்கு (Backroom staff) விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் வீரர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் உறுதிப்படுத்திய சில மணித்தியாலங்களிலேயே இந்த புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஜூன் 15ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெறவுள்ள ஈரானின் முதலாவது போட்டிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக, நேற்று வெள்ளிக்கிழமை […]

இலங்கை செய்தி

யாழ். சங்கவேலி கொலை: இரு சந்தேகநபர்கள் கைது!

  • June 6, 2026
  • 0 Comments

யாழ். சங்குவேலிப் பகுதியில் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வந்த முதியவர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு, உடமைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். அத்துடன், கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதியும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கை வந்து, சங்குவேலியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த 67 வயதுடைய முதியவரே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். கடந்த மே மாதம் […]

உலகம் ஐரோப்பா செய்தி

அமெரிக்க துணை ஜனாதிபதியின் கருத்துக்கு பிரிட்டன் கடும் கண்டனம்!

  • June 6, 2026
  • 0 Comments

மாணவர் Henry Nowak கொல்லப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி , அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் பிரிட்டன் குடியேற்றக் கொள்கைகளை விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வான்ஸின் கருத்துக்கள் சமூகத்தில் பிளவை உண்டாக்கும் முயற்சி என சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய அரசு, வெளிநாட்டு அரசியல்வாதிகளின் தலையீட்டை வன்மையாகக் கண்டித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் 3-ஆம் திகதி, Southampton பகுதியில் நண்பர்களுடன் இரவு நேரப் பொழுதுபோக்கை முடித்துவிட்டுத் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த ஹென்றி நோவாக் என்ற மாணவன், Vickrum […]

அரசியல் இலங்கை செய்தி

செப்டம்பரில் இலங்கைக்கு ஆபத்து: எதிரணி எச்சரிக்கை!

  • June 6, 2026
  • 0 Comments

“எதிர்வரும் செப்டம்பர் மாதமாகும்போது இலங்கையில் பாரிய நெருக்கடி ஏற்படும். கோட்டாபய – 02 நிலைமைக்கூட தோற்றம்பெறலாம்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார். இது தொடர்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு , “டொலரைக்கூட முறையாக நிர்வாகிக்க முடியாத ஆட்சியே இது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆகும்போது பாரிய பிரச்சினையை இந்நாடு எதிர்கொள்ள நேரிடும். இதனை அநுரகுமார திஸாநாயக்கவால் நிர்வகிக்க முடியாமல்போகும். நான் இன்று […]

இலங்கை செய்தி

சொல்லிசை பாடகரை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்!

  • June 6, 2026
  • 0 Comments

சொல்லிசை பாடகர் சங்கீதன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை (06) கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் அவலங்களையும், தியாகங்களையும், வீரத்தையும், வாழ்வியலையும் தனது சொல்லிசை மூலம் பாடலாக பாடி வந்த இஞைளன் சாவகச்சேரி பொலிஸாரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை ஒட்டுமொத்த தமிழ் படைப்பாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சியில் குறித்த இச் சம்பவத்திற்கு […]

அரசியல் இலங்கை செய்தி

டயஸ்போராக்களின் தேவைக்கேற்ப செயல்படுகிறது NPP அரசு! கூட்டு எதிரணி குற்றச்சாட்டு!

  • June 6, 2026
  • 0 Comments

“ வாக்களித்த மக்கள் பற்றி சிந்திக்காது, டயஸ்போராக்களின் தேவைக்கேற்பவே என்பிபி அரசாங்கம் செயல்படுகின்றது. இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு ஜனநாயக வழியில் கூட்டு எதிரணி போராடும்.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரும், அரசியல் செயற்பட்டாளருமான சுகீஸ்வர பண்டார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ பாரிய எதிர்பார்ப்புகளுடனேயே நாட்டு […]