உலகம் செய்தி

“Golders Green தாக்குதல் பயங்கரவாதச் செயல்”

  • April 30, 2026
  • 0 Comments

லண்டன் Golders Green பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் பயங்கரவாதச் செயல் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த யூத சமூகத்தை சேர்ந்த இருவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். அவர்களின் நிலைமை தற்போது சீராக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அதேவேளை, யூத சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகின்றது என யூத சமூகத்தினர் வலியுறுத்தியுள்ளனர். பிரித்தானியப் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர், குறித்த “யூத எதிர்ப்புத் தாக்குதல்” முற்றிலும் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்ததுடன், […]

இலங்கை

யாழில் Online கேமிற்கு அடிமையான மாணவனின் விபரீத முடிவு

  • April 30, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் Online விளையாட்டிற்கு அடிமையான மாணவர் ஒருவர், நேற்று தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார். இவரது குடும்பத்தில் இவரைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் விசேட தேவையுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறானதொரு சூழலில், […]

இலங்கை

நாளை விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம்

  • April 30, 2026
  • 0 Comments

நாளை (01) சர்வதேச மே தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி கொழும்பு நகரில் பொலிஸாரால் விசேட பாதுகாப்பும் போக்குவரத்துத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமான கூட்டங்கள் மற்றும் பேரணிகள் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள அதேவேளை, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டின் ஏனைய பகுதிகளில் நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை செய்தி

பிரான்ஸ் விரைகிறது சிஐடி குழு? நடக்கப்போவது என்ன?

  • April 30, 2026
  • 0 Comments

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் CID ஷானி அபேசேகர Shani Abeysekera உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் குழு ஒன்று, பிரான்சுக்குப் பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான, புலனாய்வு முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தக் குழு பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது வெளிநாட்டில் வசித்து வரும், பிள்ளையானின் முன்னாள் பேச்சாளரான அசாத் மௌலானாவிடம் விசாரணை நடத்துவதே அவர்களின் இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகக் கருதப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் […]

உலகம் செய்தி

பொருளாதார உறவை வலுப்படுத்த ஆஸ்திரேலியா, சீனா இணக்கம்!

  • April 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi மற்றும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong ஆகியோர், பீஜிங்கில் சந்தித்து பேச்சு நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய வர்த்தக முறையைப் பாதுகாப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தைவான் விவகாரத்திற்குத் தீர்வு காண்பது மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் அரசியல் சூழல்கள் […]

செய்தி விளையாட்டு

இமாலய இலக்கை இலகுவில் எட்டிய ஹைதராபாத் அணி!

  • April 30, 2026
  • 0 Comments

ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 41ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கிடையிலான ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 44 பந்துகளில் சதம் விளாசிய அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேக சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையைப் […]

இலங்கை செய்தி

புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் திறன் சான்றிதழ் வழங்க கோரிக்கை!

  • April 29, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் மற்றும் நியூசிலாந்து தூதரகத்தைச் சேர்ந்த இலங்கைக்கான முறைசாரா குடியேற்றத் தொடர்பு அதிகாரி சோனியா டக்ளஸ் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (29) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. சர்வதேச புலம்பெயர்வு தகவல் மையத்தின் ஏற்பாட்டில் இதற்குரிய சந்திப்பு இடம்பெற்றது. முறைசாரா புலம்பெயர்வினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து […]

உலகம் செய்தி

பயங்கரவாதத் தாக்குதலா? விசாரணை வேட்டை தீவிரம்!

  • April 29, 2026
  • 0 Comments

லண்டன் Golders Green பகுதியில் யூதர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத சம்பவமா என பொலிஸார் விசாரணை வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர். தாக்குதலை நடத்திய 45 வயது சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த இரு ஆண்கள் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. 30 மற்றும் 70 வயது மதிக்கத்தக்க இரு ஆண்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர் எனவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்குதல் நடத்தியவரின் பின்னணி மற்றும் […]

உலகம் செய்தி

லண்டனில் பயங்கரம்: யூதர்கள்மீது கத்திக்குத்து தாக்குதல்!!

  • April 29, 2026
  • 0 Comments

வடக்கு லண்டனில் யூத சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். தாக்குதல் நடத்திய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் யூத எதிர்ப்பு வன்முறைச்சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள சூழலிலேயே இத்தாக்குதலும் இடம்பெற்றுள்ளது. தாக்குதல்களின் பின்னணியில் ஈரானியத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. மேற்படி தாக்குதல் சம்பவத்தை பிரிட்டன் பிரதமர் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது பயங்கரவாதத் தாக்குதலா என்பது பற்றி தகவல் […]

இலங்கை செய்தி

ஹட்டனில் கோர விபத்து: ஒருவர் பலி! 27 பேர் படுகாயம்!!

  • April 29, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் பகுதியில் தனியார் பஸ்ஸொன்று சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இருவர் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா , போடைஸ் பிரதான வீதியில் பட்டல்கலை பாலத்திற்கு அருகாமையிலேயே இன்று பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ்ஸொன்றே, மற்றொரு பஸ்ஸிற்கு வழிவிட முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த இவ்வாறு […]