செய்தி

லக்னோ, ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

  • April 22, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று நடைபெறும் 32 ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் Lucknow Super Giants , ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள Ekana கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. முதல் 4 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த […]

விளையாட்டு

டெல்லியை வீழ்த்தியது ஹைதராபாத்!

  • April 22, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 31 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Sunrisers Hyderabad அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி Delhi Capitals அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஹைதராபாத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆரம்பம் முதலே டெல்லி பந்துவீச்சை சிதறடித்தார். வெறும் 47 பந்துகளில் சதம் கடந்த அவர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 68 பந்துகளில் 135 […]

உலகம் செய்தி

அமெரிக்க துணை ஜனாதிபதியின் பாகிஸ்தான் பயணம் ரத்து!

  • April 22, 2026
  • 0 Comments

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸின் JD Vance பாகிஸ்தான் பயணம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஈரான் அதிகாரிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக அவர் இன்று இஸ்லாமாபாத் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். எனினும், அமெரிக்கா-ஈரான் இடையிலான போர்நிறுத்தத்தை காலவரையறையின்றி நீடிப்பதற்கு ட்ரம்ப் சம்மதித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. எதிர்கால சந்திப்பு குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகம் செய்தி

போர் நிறுத்த நீடிப்பு அமைதிக்கு வழிவகுக்கும்: ஐ.நா. நம்பிக்கை

  • April 22, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான தற்காலிக யுத்த நிறுத்தத்தை நீட்டிக்கும் முடிவை ஐ.நா.பொதுச்செயலாளர் António Guterres வரவேற்றுள்ளார். இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேம்படுத்த உதவும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள், பிராந்தியத்தில் நீடித்த அமைதியை நிலைநாட்ட ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும் என்று அவர் கருதுகிறார். மேலும், இந்த இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்துச் செல்வதில் பாகிஸ்தான் ஆற்றும் முக்கியப் பங்கையும் ஐ.நா. […]

உலகம் செய்தி

போர் நிறுத்தம் நீடிப்பு! கடற்படை முற்றுகை தொடரும் என்கிறார் ட்ரம்ப்!!

  • April 22, 2026
  • 0 Comments

ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தத்தை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் இன்று முடிவடைய இருந்த நிலையிலேயே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்தியஸ்த முயற்சியில் ஈடுபடும் பாகிஸ்தானால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், ஈரான்மீதான கடற்படை முற்றுகை தொடர்ந்து அமுலில் இருக்கும் என ட்ரம்ப் கூறியுள்ளார். ஆரம்பத்தில் தாக்குதலுக்குத் தயாராக இருந்த அமெரிக்காவின் இந்தத் திடீர் மனமாற்றம், இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கான புதிய […]

உலகம் செய்தி

போர் நிறுத்தத்தை நீடிக்குமாறு பாகிஸ்தான் அவசர கோரிக்கை!

  • April 21, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இருவாரகால தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் (22) நிறைவடையும் நிலையிலேயே இந்த அவசர கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதுவருடன் Natalie A. Baker இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் Ishaq ⁠Dar இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்தத்தை […]

ஆப்பிரிக்கா உலகம் செய்தி

ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா நேசக்கரம்!

  • April 21, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர்ச்சூழலால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா உதவும் என அந்நாட்டு ஜனாதிபதி Xi Jinping உறுதியளித்துள்ளார். Mozambique நாட்டு ஜனாதிபதியுடன் பீஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். அத்துடன், ஆப்பிரிக்கத் தலைவர்களுடன் இணைந்து அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தவும் சீன ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல போரை உடனடியாக நிறுத்திவிட்டு சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துமாறு போர் நடைபெறும் நாடுகளின் தலைவர்களுக்கு அவர் அறைகூவல் விடுத்துள்ளார். ஆபிரிக்க நாடுகளில் சீனா […]

செய்தி

செம்மணி மனித புதைகுழி: ஐரோப்பிய குழுவின் கண்காணிப்பு விஜயம் ஒத்திவைப்பு!

  • April 21, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று (21) பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக் குழுவினருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. எனினும், தற்போது களத்தில் அகழ்வுப் பணிகள் நடைபெறாத காரணத்தால், இன்று அவர்கள் வருகை தரவில்லை. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளான வி.எஸ். நிரஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜா ஆகியோர் […]

இலங்கை செய்தி

மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட பஸ் சேவை ஆரம்பம்!

  • April 21, 2026
  • 0 Comments

மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோருக்காக “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட “தாழ்தள” (Low Floor) பஸ் சேவை இன்று (21) மாகும்புர போக்குவரத்து மையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பயணிகள் பஸ் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக்கூடிய “LMT GO” எனும் கைபேசி செயலியும் (Application) இதன் போது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இத்திட்டம் நாட்டின் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்கதொரு முன்னெடுப்பு என்று குறிப்பிட்டார். சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர், […]

செய்தி

பாகிஸ்தானின் சமரச முயற்சிக்கு சீனா முழு ஆதரவு!

  • April 21, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் துணைப் பிரதமர் இஷாக் தார் Ishaq Dar மற்றும் சீனத் தூதுவர் ஜியாங் ஜைடாங் Jiang Zaidong ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட பாகிஸ்தான் மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகளை சீன தூதுவர் பாராட்டியுள்ளார்.