தையிட்டியில் தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கஜேந்திரகுமார் அவசர கடிதம்
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ். மாவட்ட செயலாளரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். இந்தக் காணிகளை நாளைய தினம் அளவீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மாவட்ட செயலாளருக்கு அவர் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த 17 வருடங்களாக தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராடி வரும் நிலையில், காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் […]





