திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு!
திருகோணமலை-கோமரங்காடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீகம பகுதியைச் சேர்ந்த நபரொருவர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 65 வயதுடைய ஹேரத் ஹமிகே விஜேரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒட்டிச்சங்குளத்தில் தேன் எடுப்பதற்காக சென்றபோது யானை தாக்கியதாக தெரிய வந்துள்ளது. இன்று (24) சுமார் 3.55 மணியளவில் கோமரங்கடவல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல […]




