சீனாவில் காலணி தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து – 28 பேர் உயிரிழப்பு
சீனாவின் தென்கிழக்கு நகரமான ஜின்ஜியாங்கில் (Jinjiang) உள்ள காலணி தொழிற்சாலையொன்றில் இன்று பாரிய தீவிபத்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இதில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தீ விபத்து “பெரும் உயிரிழப்புகளை” ஏற்படுத்தியுள்ளதாகவும், இதற்குப் பொறுப்பானவர்கள் “கடுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்” என்றும் அதிபர் ஷி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தீவிபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபுஜியான் (Fujian) மாகாணத்தில் உள்ள ஜின்ஜியாங் (Jinjiang), உலகின் விளையாட்டுக் காலணிகளில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது.




