பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் கடும் வெப்பத்துடனான வானிலை காரணமாக, சிறுவர்கள் நீர்ச்சோர்வினால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கப் பெற்றோர்கள் அவதானத்துடன் இருக்குமாறு கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். அதிகப்படியான தூக்கக்கலக்கம் அல்லது சோம்பல், பசியின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் சிறுவர்களிடம் தென்பட்டால் அவர்கள் நீர்ச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் சிறுவர்களுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான பானங்களை (Natural fluids) வழங்குவது அவசியமாகும் […]





