இந்திய துணை ஜனாதிபதி நாட்டை வந்தடைந்தார்
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் 49 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர். அவர்கள் இன்று (19) இந்திய விமான சேவைக்குச் சொந்தமான ‘INDIA – 01’ ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளனர்.




