பொழுதுபோக்கு

தன் நீண்ட நாள் காதலரான மத்யாஸ் போவை கரம் பிடித்தார் தாப்ஸி!

நடிகை தாப்ஸி தனது நீண்ட நாள் காதலரான மத்யாஸ் போவை கடந்த மார்ச் 23 அன்று உதய்ப்பூரில் திருமணம் செய்துள்ளார். நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் நடிகை தாப்ஸிக்கும் அவரது காதலர், முன்னாள் பேட்மிண்டன் ப்ளேயர் மத்யாஸ் போவுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அந்த செய்தியை தாப்ஸி மறுத்தார். இப்படியான சூழ்நிலையில்தான் கடந்த மார்ச் 23 அன்று இந்த ஜோடிக்கும் உதய்ப்பூரில் திருமணம் நடந்துள்ளது. நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

Image

இவர்களது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் மார்ச் 20 அன்றே தொடங்கி இருக்கிறது. பாலிவுட்டில் இருந்து வெகு சில பிரபலங்கள் மட்டுமே தாப்ஸி திருமணத்தில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.

Taapsee Pannu gets married in a secret wedding: Reports

தமிழில் ‘ஆடுகளம்’, ‘காஞ்சனா’, ‘கேம் ஓவர்’ போன்ற படங்களில் நடித்திருக்கும் தாப்ஸி, பாலிவுட்டிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். முன்னாள் பேட்மிண்டன் ப்ளேயர் மத்யாஸ் போவை கடந்த 10 வருடங்களாகக் காதலித்து வந்தார் தாப்ஸி. தனது தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து பொதுவெளியில் பகிர்வதில் அதிகம் ஆர்வம் காட்டாதவர் தற்போது திருமணத்தையும் பிரைவேட்டாக முடித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content