முக்கிய செய்திகள்

38 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை அறிவித்துள்ள இலங்கை! வெளியான புதிய அறிவிப்பு

38 நாடுகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விசா இல்லாத அணுகலை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று அறிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் நெறிப்படுத்தப்பட்ட ‘one-chop’ அணுகுமுறையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது, அங்கு விசா அல்லது விசா நீட்டிப்பு விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட்டில் ஒரே ஒரு அதிகாரப்பூர்வ முத்திரை அல்லது முத்திரையுடன் (‘சாப்’) வழங்கப்படுகிறது என அமைச்சர் சப்ரி, தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு விசா கவுண்டர்களில் நெரிசலைக் குறைக்க உதவும் என்று வெளியுறவு அமைச்சர் மேலும் கூறினார்.

இதேவேளை, முன்னாள் சுற்றுலா அமைச்சரும், ஜனாதிபதியின் சுற்றுலா விவகாரங்களுக்கான ஆலோசகருமான ஹரின் பெர்னாண்டோவும், ‘ஒன்-சாப்’ வீசா இல்லாத முறை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் என உறுதிப்படுத்தினார்.

மேலும் இந்த நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை ஜனாதிபதிக்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் கூறினார்.

இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விசா வழங்கும் முறைமையில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் தாமதத்தை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

TJenitha

About Author

You may also like

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 20, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்