அறிவியல் & தொழில்நுட்பம்

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பாவனையாளர்களுக்கு விசேட தகவல்

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களை மெட்டா நிறுவனம் நோட்டம் விடுவதாக பலமுறை குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனம் தற்போது புதிய பிரைவசி அம்சம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக பயனர்கள் தங்களை யார் நோட்டமிடுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து தடுக்க முடியும் என சொல்லப்படுகிறது.

Activity Off-Meta என்ற புதிய அம்சம் மூலமாக மெட்டா மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பயனர்களின் டேட்டாக்களை யார் பார்க்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்தும் பிரைவசியை தேர்ந்தெடுக்கும் முறைகள் இதில் அடங்கும். இதன் மூலமாக எந்தெந்த பிசினஸ் நிறுவனங்களுக்கு, மெட்டா தன் பயனர்களின் தரவுகளை அனுப்புகிறது என்பதை ஒவ்வொரு பயனரும் கண்காணித்து அதை முடக்க முடியும். யாராவது உங்களுடைய டேட்டாவை பகிர்வது போல் உங்களுக்குத் தெரிந்தால் அவற்றை நீங்களே தடை செய்து டேட்டாக்களை கிளியர் செய்யலாம்.

இந்த அம்சத்தை இன்ஸ்டாகிராமில் எனேபிள் செய்ய, உங்களுடைய இன்ஸ்டாகிராம் கணக்கிற்குச் சென்று, ப்ரொபைல் பிக்சருக்கு அருகில் இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டவும். அதன் பின்னர் Settings and Privacy உள்ளே சென்று Activity என்பதைத் தொட்டால், Activity off Meta Technologies என வரும். இதன் உள்ளே சென்று Disconnect User Activity என்பதை ஆன் செய்தால் இனி யாரும் உங்களை இன்ஸ்டாகிராமில் கண்காணிக்க முடியாது.

பேஸ்புக்கில் இந்த அம்சத்தை எனேபிள் செய்ய, பேஸ்புக் கணக்கின் வலது மூலையில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து Settings and Privacy உள்ளே சென்று செட்டிங்ஸ் என்பதை தொடவும். அதன் பிறகு Your Facebook Information உள்ளே சென்று Off Facebook activity கிளிக் செய்தால், இந்த அம்சத்தை மேனேஜ் செய்யும் ஆப்ஷன் இருக்கும்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உங்களை யாரும் கண்காணிக்காதவாறு ஒவ்வொரு பயனரும் தடுக்க முடியும்.

 

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content