அறிந்திருக்க வேண்டியவை செய்தி

உலகில் கல்வியறிவு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த தென்கொரியா

உலகில் கல்வியறிவு அதிகம் உள்ள நாடுகள் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

World of Statistics இணையதளத் தரவுகளின்படி, இந்த ஆய்வு உலகில் மூன்றாம் நிலைக் கல்வி வரை படித்தவர்களை அடிப்படையாகக் கொண்டது.

இங்கு 24 வயது முதல் 34 வயது வரை உள்ளவர்களின் கல்வி கண்காணிக்கப்பட்டது.

இதன்படி, உலகில் கல்வியறிவு அதிகம் உள்ள நாடாக தென்கொரியா பெயர் பெற்றுள்ளதுடன், அந்த வயதிற்குட்பட்டவர்களில் 69 சதவீதம் பேர் கல்வி கற்றவர்கள் என்பது சிறப்பம்சமாகும்..

அந்த தரவரிசையில் கனடா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, மேலும் அந்த வயதுடைய கனேடியர்களில் 67 சதவீதம் பேர் படித்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ஜப்பான் மற்றும் அயர்லாந்து முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன, ஜப்பானிய குடிமக்களில் 65 சதவீதம் பேர் படித்தவர்களாகவும், 63 சதவீதம் ஐரிஷ் குடிமக்கள் படித்தவர்களாகவும் அடையாளப்படுத்துகிறார்கள்.

அவுஸ்திரேலியா அந்த தரவரிசையில் 11வது இடத்தைப் பெற்றுள்ளதுடன், அந்த வயதுடைய ஆஸ்திரேலியர்களில் 56 சதவீதம் பேர் படித்தவர்கள் என்று கூறப்படுகிறது.

(Visited 54 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!