உலகம் செய்தி

தென் சீனக் கடலில் பதற்றம் – சீனாவின் நடவடிக்கைகளுக்கு பென்டகன் தலைவர் கண்டனம்

தென் சீனக் கடலில் சீனாவின் ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகப் பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் குற்றம் சாட்டினார்.

மேலும், சீன அச்சுறுத்தல்களுக்குக் கூட்டாகப் பதிலளிக்க, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குத் தொழில்நுட்பம் மூலம் ஆதரவு அளிப்பதாகவும் கூறினார்.

ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் பலதரப்புப் பேச்சுவார்த்தைகளை உள்ளடக்கிய கோலாலம்பூரில் நடந்த இரண்டாவது நாள் கூட்டங்களில், ஆசியான் (ASEAN) பாதுகாப்பு அமைச்சர்களுக்கு பகிரப்பட்ட கடல்சார் கள விழிப்புணர்வை உருவாக்க ஹெக்செத் முன்மொழிந்தார்.

சீனா மற்ற நாடுகளுக்கு மரியாதை காட்டவில்லை என்றும், அவர்களின் பிராந்திய இறையாண்மையை அச்சுறுத்தியது என்றும் அவர் கூறினார்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஆயுதப் படைகள் தென் சீனக் கடலில் கூட்டுப் பயிற்சியை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு பென்டகன் தலைவரின் கருத்துகள் வந்தன.

பயிற்சிகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, இது பிராந்தியத்தில் ஒரு றிப்பிடத்தக்க நடவடிக்கை என்று சீன இராணுவச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை தீவிரமாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு பயிற்சியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி