பிரித்தானிய மக்களின் மனநிலை மாற்றம் : மீண்டும் சூடுபிடித்த விவாதம்!
பிரித்தானியாவில் அரைவாசி மக்கள் பிரெக்ஸிட் பொது வாக்கெடுப்பை ஆதரிப்பார்கள் என கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரெக்ஸிட் மீதான பொதுமக்களின் மனநிலை கணிசமாக மோசமடைந்துள்ளது.
2021-ல் 27 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை, தற்போது 48 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கணிக்கப்பட்டதை விட மோசமாகச் செல்கிறது என்று நிபுணர்கள் நம்புகின்றார்கள்.
இது மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதற்கான விருப்பத்தை காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் மீண்டும் சேர வேண்டும் என்ற வெஸ் ஸ்ட்ரீட்டிங்கின் அழைப்பால், அதன் உறுப்புரிமை குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




