பொழுதுபோக்கு

மகாநதி தொடரில் இணையும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி பிரியா

சிறகடிக்க ஆசை தொடர் நாயகி கோமதி பிரியா, மலையாள மொழியில் எடுக்கப்படும் மகாநதி தொடரில் இணைந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பிரவீன் பென்னட் இயக்கி வரும் இத்தொடரில் லஷ்மிபிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன், ஸ்வேதா , கம்ருதீன், பேபி காவியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். டிஆர்பியிலும் இத்தொடர் முன்னணியில் உள்ளது.

இந்த நிலையில், மகாநதி தொடர் மலையாள மொழியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இந்தப் புதிய தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிகை கோமதி பிரியா நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக சச்தேவ் பிள்ளை நடிக்கவுள்ளார்.

தமிழில் விஜய் – காவேரி (லஷ்மிபிரியா – சுவாமிநாதன்) நடிக்கும் பாத்திரங்களில் கோமதி பிரியா – சச்தேவ் நடிக்கவுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரில் லஷ்மிபிரியா – சுவாமிநாதன் இணை, மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில், கோமதி பிரியா – சச்தேவ் இணையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்