போர் பதற்றம் – கச்சா எண்ணையின் விலை 03% அதிகரிப்பு
மத்தியக் கிழக்கில் அதிகரித்துவரும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெயின் விலை 03 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா ஈரானின் 90 இலக்குகளை தாக்கி அழித்துள்ள நிலையில், பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன்காரணமாக கச்சா எண்ணெயின் விலை 3.08 சதவீதம் உயர்ந்து 78.35 டொலராக பதிவாகியுள்ளது.
தே நேரத்தில் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 2.21 டொலர் (3.09%) உயர்ந்து $73.62 டொலராக பதிவாகியுள்ளது.
இதற்கிடையே அதிகரித்த பதற்றங்களுக்கு மத்தியில் ஈரான் ஹோர்மூஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. அவ்வழியாக நேற்றைய தினம் வெறும் 06 கப்பல்கள் மட்டுமே பயணித்ததாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




