பொழுதுபோக்கு

பலான இடத்தில் தொட்ட மருத்துவர்! பளார் விட்ட கவர்ச்சி நடிகை….

நடிகை ஷகீலா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த மிகவும் மோசமான சம்பவம் குறித்து, யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது மட்டுமின்றி, அனைத்து துறையிலும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருப்பதாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷகிலாவுக்கு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்பட்ட ஷகீலா, இந்த நிகழ்ச்சி மூலம் பலருக்கு அம்மாவாக மாறினார். சமீப காலமாக பல்வேறு மொழிகளில் முக்கிய குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஷகீலா, தமிழில் யூடியூப் சேனல் ஒன்றில், பல பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்து பேட்டி கண்டு வருகிறார்.

அதில் அவ்வப்போது தன்னை பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் எடுத்த பேட்டி ஒன்றில், தன்னிடம் தவறாக நடந்து கொண்ட மருத்துவர் குறித்து பேசியுள்ளார். தன்னுடைய அம்மாவிற்கு உடல்நலம் சரி இல்லை என மருத்துவமனைக்கு ஷகீலா அழைத்து சென்றுள்ளார்.

அப்போது மருத்துவர் எழுதிய எழுத்துக்கள் சரியாக புரியாததால் அதுபற்றி கேட்டுள்ளார். திடீர் என, ஷகீலாவின் பக்கத்தில் வந்த அந்த மருத்துவர், தொடரக்கூடாத இடத்தில் தொட்டு என்ன சந்தேகம் சொல்லு என கேட்டுள்ளார்.

அந்த மருத்துவரின் செயலால் உச்சகட்ட கோபமடைந்த ஷகீலா எதை பற்றியும் யோசிக்காமல் அந்த மருத்துவரை அறைந்ததோடு, பயங்கரமாக திட்டி அடி வெளுத்து வாங்கியுள்ளார்.

அவரின் சத்தத்தை கேட்டு வெளியே இருந்த செவிலியர் உள்ளே வந்து, ஷகீலாவை சமாதானம் செய்து அனுப்பினாராம். இந்த சம்பவத்தை கூறி, அணைத்து துறையிலும்… அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் உள்ளது என தெரிவித்துள்ளார் நடிகை ஷகீலா.

 

(Visited 8 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content