இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – தூங்கும் போது கணவனுக்கு தீ வைத்த மனைவி

மொரட்டுமுல்ல, சமரகோன் காணி பிரதேசத்தில் மனைவி தனது கணவருக்கு தீ வைத்த செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக மனைவி நேற்று அதிகாலை 3 மணியளவில் கணவனை தீ வைத்து எரித்துள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் நீண்ட காலமாக வேறு ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாகவும், அந்த உறவு காரணமாக தம்பதியினருக்கு இடையில் அவ்வப்போது தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் மொரட்டுமுல்லை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை கணவன் தூங்கிக் கொண்டிருந்த போது மனைவி அவரின் உடலில் தீ வைத்து எரித்ததில் அந்த நபரின் கால்கள் இரண்டும் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவர் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், குறித்த பெண்ணிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, ​​கணவர் தன்னை கோடரியால் தாக்கியதாகவும் தான் இறந்துவிட்டதாக நினைத்து தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content