இலங்கை

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு கைப்பற்றல்

இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு, கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட இந்தப் படகு, யாழ்ப்பாணம் தலைமையக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இஷாரா கிளிநொச்சியில் தலைமறைவாகியிருக்க உதவியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவர், கொழும்பு புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இஷாரா செவ்வந்திக்கு உதவி புரிந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் நான்கு சந்தேக நபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், இஷாரா செவ்வந்தியின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்