ஐரோப்பா

அமெரிக்கா வழங்கிய பாதுகாப்பு கருவிகளை தாக்கியழித்த ரஷ்ய ஏவுகணைகள்

அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய ஏவுகணைகள் உட்பட ரேடார் நிலையங்களை, ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவிற்கு ரஷ்யா பல்வேறு ஆயுத உதவிகளை செய்து வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா, உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பின் ஏவுகணைகள் மற்றும் பல ராணுவ ஆயுதங்களை வழங்கியிருந்தது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ஏவப்பட்ட ரஷ்யாவின் ஏவுகணைகளை, ரேடார் மூலம் துல்லியமாக கண்டறிந்து உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

US Finalizing Arms Upgrade to Ukraine With Patriot Missiles - Bloomberg

இந்நிலையில் கடந்த மே 16ம் திகதி ரஷ்யாவின் Kinzhal ஹைப்பர் சோனிக் ஏவுகணை மூலமாக, அமெரிக்கா தயாரித்த பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பின் ஐந்து ஏவுகணைகள் மற்றும் ரேடார் நிலையத்தை முற்றிலுமாக அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தரையில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஏவுகணைகள் சேதமடைந்துள்ளதாகவும், மேலும் ரேடார்களின் முக்கிய பாகங்கள் சேதமடையவில்லை எனவும் அமெரிக்காவின் செய்தி நிறுவனமான CNN தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்துவதால், உக்ரைனில் வாழும் மக்கள் எப்போதும் பதட்டமான சூழ்நிலையிலே வாழ வேண்டியுள்ளது.மேலும் ரஷ்யா இந்த மாதங்கள் மட்டும் இதுவரை ஒன்பது முறை ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதாக, உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content