செய்தி

ரஷ்யாவில் அரச ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட தடை!

மாஸ்கோ : ரஷ்யாவில் அரசு ஊழியர்கள் ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஐ-போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பான எப்.எஸ்.பி. அளித்த தகவலையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு. ரஷ்யாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ரஷ்யர்களில் பலரும் ஐ-போன் மற்றும் ஐ-பேடு சாதனங்களை மிகவும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2022 பிப்ரவரியில் ரஷ்யா அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.

உக்ரைன் ஆக்ரமிப்பை அடுத்து கடந்த 2022 மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷ்யாவிலிருந்து வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது. எனினும், வேறு நாடுகளிலிருந்து ரஷ்யாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐ-போன் 14 உள்பட பல மாடல்களை ரஷ்யர்கள் வாங்கி பயனபடுத்தி வந்தனர்.

அமெரிக்காவின் ஒரு உளவு நடவடிக்கையின் விளைவாக ரஷ்யாவினரால் பயன்படுத்தப்படும் பல ஆயிரக்கணக்கான ஆப்பிள் நிறுவன சாதனங்கள் பாதுகாப்பை இழந்து விட்டதாக ரஷ்யாவின் முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பான எப்.எஸ்.பி. 2 மாதங்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தது.

ஆப்பிள் நிறுவனமும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையும் இணைந்து இதனை செய்ததாக எப்.எஸ்.பி. தெரிவித்தது. இதனையடுத்து ரஷ்ய டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் அந்நாட்டு அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், ஐபோன் மற்றும் ஐபேடு மூலமாக அமெரிக்கா, ரஷ்ய மக்களின் தகவல் தொடர்புகளை அறிந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஐ-போன்கள் மற்றும் ஐ-பேடுகளை வேலை நோக்கங்களுக்காக ரஷ்ய அரசாங்க ஊழியர்கள் இனி பயன்படுத்தப்பட கூடாது.

பணி பயன்பாடுகளுக்கான செயலிகளை உபயோகப்படுத்தவும், வேலை சம்பந்தமான மின்னஞ்சல் பரிமாற்றத்தை செய்யவும், ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை பயன்படுத்த கூடாது. தனிப்பட்ட தேவைகளுக்காக ஐ-போன்களைப் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.

ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஆப்பிளுடன் இணைந்து இந்த உளவு வேலையில் ஈடுபட்டதாக எப்.எஸ்.பி. குற்றம் சாட்டிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

 

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content