உலகம் செய்தி

ஃபோர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்த ரொனால்டோ – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது வாழ்க்கையில் நான்காவது முறையாக அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் (ஃபோர்ப்ஸ் பட்டியலில்)  முதலிடம் பிடித்துள்ளார்.

ரொனால்டோ சவுதி அரேபியப் பக்கமான அல் நாஸருக்குச் சென்ற பிறகு உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

அவருடைய மொத்த வருமானம் சுமார் $260m (£205m) எனக் கூறப்படுகிறது.  கால்பந்து வீரர் ஒருவர் அதிகூடிய சம்பளம் பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இவரைத் தொடர்ந்து ஸ்பானிய கோல்ப் வீரர் ஜான் ரஹ்ம் சவுதி ஆதரவுடைய எல்ஐவி கோல்ப்க்கு மாறியதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அவரது ஆன்-ஃபீல்டு வருவாய் $200m (£158m) ஆகும், அதே சமயம் அவர் $60m (£47m) ஸ்பான்சர்ஷிப் மூலம் பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பட்டியலில் மூன்றாவது இடத்தில் லியோனல் மெஸ்ஸி காணப்படுகிறார்.  அவருடைய சம்பளம்  $135m (£107m) ஆக உள்ளது. 36 வயதான அவர் ஆன்-ஃபீல்ட் வருவாயில் $65m (£51m) சம்பாதிப்பதாக தரவுகள் காட்டுகின்றன.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி