இலங்கையில் தகவல் வழங்குவோருக்கு வெகுமதி

இலங்கையில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கான வெகுமதி தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தீர்மானத்தின் பிரகாரம் இந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரீ56 ரக துப்பாக்கி குறித்து தகவல் அளிப்பவருக்கு 500,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.
அத்துடன், தானியங்கி ஆயுதங்கள் அல்லது கைத்துப்பாக்கிகளுக்கு 300,000 ரூபாவும், ரிவோல்வருக்கு 250,000 ரூபாவும் வெகுமதியாக வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
(Visited 19 times, 1 visits today)