செங்கடல் பதற்றம் : இங்கிலாந்து ஏற்றுமதி வணிகங்கள் பாதிப்பு

செங்கடலை சூழ்ந்த வர்த்தகப் பாதைகளில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் பாதிக்கு மேற்பட்ட இங்கிலாந்து ஏற்றுமதி வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என பிரிட்டிஷ் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வடமேற்கு யேமனின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஈரான் ஆதரவு ஹூதிகள் நவம்பர் முதல் அப்பகுதியில் வணிகக் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர் .
மேலும் இலக்குகள் இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல்கள் அல்லது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் தொடர்புடைய கப்பல்கள் மட்டுமே என்று கூறுகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)