இலங்கை

இலங்கையில் திருட்டுக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு நேர்ந்த பரிதாபம்

இலங்கையில் திருட்டுக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் வீட்டின் கூரை மீது ஏறி தப்பிச் செல்ல முயற்சித்தபோது, கீழே விழுந்துள்ளார்.

இதனால் கால் முறிந்த நிலையில் பொலிஸாரிடம் சிக்கியதாக இமதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

அமுகொட்டுகந்த, பிலான பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய சந்தேக நபரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்ற கறுவாப்பட்டை திருட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பொலிஸார் வீட்டுக்குச் சென்றபோது சந்தேக நபர் குளியலறையில் இருந்து கூரையின் மீது ஏறி தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

அவ்வாறு தப்பிச் சென்றபோது கூரையிலிருந்து தரையில் வீழ்ந்துள்ளார். இதனால், கால் முறிந்த நிலையில் காணப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரால் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், காலி பதில் நீதிவான் இன்று (17) மாலை கராப்பிட்டிய வைத்தியசாலைக்குச் சென்று சந்தேக நபரை பரிசோதனை செய்துவிட்டு, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content