தென் கொரிய நாட்டின் ஜனாதிபதி லீ ஜே மியங் உடன் நடிகை பிரியங்கா மோகன் இருக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கார்த்திக் இயக்கத்தில், பிரியங்கா மோகன் நடிப்பில் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 ஆம் திகதி வெளியானது.
தமிழ்நாட்டில் இருந்து தென் கொரியா வரை செல்லும் செண்பாவின் பயணத்தை மையமாகக் கொண்ட இந்த கதை நடிகர்களின் திறமையான நடிப்பு, அதன் அழகான காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களம் என்பன பலரின் பாராட்டுகளை பெற்றது.

இந்த படத்தில் பிரியங்கா மோகன் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியங் இந்தியா வந்து இருக்கும் நிலையில், அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் விருந்து வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ‘மேட் இன் கொரியா’ படத்தில் நடித்த நடிகை பிரியங்கா கலந்து கொண்டுள்ளார்.
இந்த விழாவில் நடிகை பிரியங்கா மோகனுக்கு அழைப்பு வந்த நிலையில், அவர் கலந்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை தனக்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியங் ஆகியோரின் முன்னிலையில் இந்த விருந்து நடைபெற்றது என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த பலரும் பிரியங்கா மோகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.





