ஐரோப்பா செய்தி

நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போதே தரையில் விழுந்த நேட்டோ விமானம்!

துருக்கிக்கு (Turkey) சொந்தமான நேட்டோ இராணுவ விமானம் ஒன்று இன்று ஜோர்ஜியா (Georgia) மற்றும் அஜர்பைஜான் (Azerbaijan) எல்லையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அஜர்பைஜானில் இருந்து புறப்பட்ட  C-130 விமானம்  துருக்கிக்கு  சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் தரையில் விழும் காட்சிகள் சமூக ஊடக தளங்களில் வெளியாகியுள்ளன.

விமானத்தில் எத்தனை பணியாளர்கள் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அத்துடன் விபத்துக்கான சரியான காரணமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தடயவியலாளர்கள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி