ஸ்பெயினில் வாழைப்பழங்களுக்குள் சிக்கிய மர்மம் – அதிகாரிகள் அதிர்ச்சி

ஸ்பெயினில் வரலாறு காணாத அளவில் 13 டன் கொக்கேய்ன் (Cocaine) போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த மாதம் எக்வடோரின் (Ecuador) குவாயாகில் (Guayaquil) நகரிலிருந்து வந்த கப்பலிலிருந்து கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டது.
கப்பலில் வாழைப்பழங்கள் கொண்டுவரப்பட்டன. அவை கொகேய்ன் உள்ள பெட்டிகளை மறைக்கப் பயன்படுத்தப்பட்டன. அவற்றைப் பற்றி எக்வடோர் அதிகாரிகள் ஸ்பானிய அதிகாரிகளுக்குத் தகவல் தந்தனர்.
சம்பவத்தில் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் பங்குதாரர் அவர் என்று நம்பப்படுகிறது.
மற்ற 2 சந்தேக நபர்களைக் பொலிஸார் தேடி வருகின்றனர்.
(Visited 55 times, 1 visits today)