இந்தியா

தாய் தற்கொலை… ஆத்திரத்தில் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மகன்!

கணவரின் தொல்லையால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆத்திரத்தில் தனது தந்தையின் தலையில் கல்லைப்போட்டு மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், தாவண்கெரே மாவட்டம், ஜகலுரு தாலுகா லக்கிம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சனப்பா(60). இவரது மனைவி திப்பம்மா(52). இவர்களது மகன் ரமேஷ்(30). அஞ்சனப்பா கட்டுமான வேலையில் ஈடுபட்டு வந்தார். அத்துடன் மதுவுக்கு அடிமையான அஞ்சனப்பா, அன்றாடம் மதுபோதையில் வீட்டில் மனைவியுடன் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று வழக்கம் போல வேலை முடிந்து குடிபோதையோடு வீட்டிற்கு அஞ்சனப்பா வந்தார். அத்துடன் தனது மனைவி திப்பம்மாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த திப்பம்மா,நேற்று நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மிதிவண்டியில் சென்ற நபர் படுகொலை

தன் தாய் தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்த ரமேஷ், வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது தந்தை அஞ்சனப்பா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். தன் தாய் தற்கொலைக்கு காரணமான தந்தை நன்றாக உறங்குவதைக் கண்ட ரமேஷ் கடும் கோபம் கொண்டார். அங்கு கிடந்த கல்லை அஞ்சனப்பாவின் தலையில் ரமேஷ் போட்டார். இதனால் அஞ்சனப்பாவின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்த ஜகளூர் பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தற்கொலை செய்து கொண்ட திப்பம்மா, கொலை செய்யப்பட்ட அஞ்சனப்பா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு பொலிஸார் அனுப்பி வைத்தனர்.

மேலும் தந்தையை கொலை செய்த ரமேஷை பொலிஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஒருவரின் குடிப்பழக்கம் இருவரின் உயிரைப் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content