இலங்கை

தலவாக்கலையில் முகத்துக்கு பூசும் கிரீமினால் ஏற்பட்ட விபரீதம் – மாணவி எடுத்த முடிவு

தலவாக்கலையில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தார்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்டட் றூப் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முகத்துக்கு பூசும் கிரீம் மூலம் அண்ணன் தங்கை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் பதினொரு வயதுடைய மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

போயா தினம் என்பதால் அண்ணன் தங்கை மற்றும் பாட்டியுடன் ஆலயத்திற்கு செல்ல தயாராகும் போது அண்ணன் பயன்படுத்தும் கிரீமை தங்கை பயன்படுத்தியுள்ளார்.

இதன்போது அண்ணன் தங்கையிடம். ஏன் எனது கிரீமை போடுகின்றாய் என கேட்டுள்ளார். அதன் பின்னர் பாட்டியுடன் அண்ணன் ஆலயத்திற்கு செல்லும் போது தனது தங்கையையும் அழைத்த போது ஆலய வழிபாட்டில் கலந்துகொள்ள வருவதற்கு மறுத்துள்ளார்.

இதையடுத்து பாட்டியும் அண்ணனும் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை முடித்து கொண்டு ஆலயத்தில் வழங்கப்பட்ட ‌ அன்னதானத்தினை தங்கைக்கும் எடுத்துகொண்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது அயலவர்கள் சகோதரி இறந்துள்ளதாக தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அண்ணன் மற்றும் பாட்டியும் வீட்டுக்கு வந்த போது தனது தங்கை தூக்கிட்டு இறந்துள்ள விடயம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் போது, தனது தங்கையிடம் எப்போதும் பேசுவது போல் பேசியதாகவும், இறந்த சகோதரியின் அண்ணனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது வாக்கு மூலம் வழங்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content