இலங்கை

யாழில் இசை நிகழ்ச்சியில் குழப்பம் – கட்டுப்பாடுகளை மீறிய மக்கள்

யாழில் இடம்பெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகளவில் சன நெரிசலினால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொண்டதினாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஒருவர் மயக்கமடைந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் முன்னனி பாடகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் பங்குபற்றும் குறித்த நிகழ்ச்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில் இரவு முதல் நடைபெற்றுள்ளது.

இதன்போது இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த மக்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதால் அங்கு சனநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் ரசிகர்களை சற்று நிதானத்துடன் நடந்துகொள்ளுமாறு நிகழ்ச்சியின் இடைநடுவில் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஏற்பட்ட குழப்ப நிலையை பொலிஸார் கட்டுப்படுத்தும் வரையில் இசை நிகழ்ச்சியானது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Hariharan Concert 5

Hariharan Concert 1

Hariharan Concert 3

Hariharan Concert 2

Hariharan Concert 4

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content