இலங்கை

மடு அன்னையின் ஆடி திருவிழாவில் பங்கேற்போருக்கு மன்னார் மறைமாவட்ட ஆயரின் விசேட கோரிக்கை

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா நாட்களில் விடுமுறை அதிகமாக காணப்படுவதால் அதிகமான மக்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

மடுத் திருப்பதிக்கு யாத்திரிகர்களாக வருவோர் இங்கு வழிபாடுகள் நடை பெறுகின்ற போது வீடுகளில் அல்லது கூடாரங்களில் இருந்து உங்கள் பொழுதுபோக்கு தவிர்த்து வழிபாடுகளில் கலந்து கொண்டு அன்னையின் ஆசீர் பெற்றுக் கொள்ளுங்கள் என மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத  திருவிழா குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு பணிகளில் ஈடுபடும் அனைத்து திணைக்களங்களின் ஒத்துழைப்பு களுக்கு நன்றி கூறி நிற்கின்றேன்.

உங்கள் ஒத்துழைப்பு இருக்கும் போதுதான் இவ்வாறான பெரு விழாவை சிறப்பாக கொண்டாட முடியும்.
இந்த ஆடி மாத பெருவிழாவுக்கு தற்பொழுது அதிகமான பக்தர்கள் வந்து விட்டார்கள்.
கடந்த ஆண்டு எரிபொருள் தட்டுப்பாடு இருந்தமையால் பெரும்பாலான பக்தர்கள் இவ்விழாவுக்கு வருகை தர முடியாத நிலை இருந்தது.ஆனால் இம்முறை இவ்வாறான பிரச்சனைகள் இல்லாதபடியால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

மடு திருப்பதி வளாகத்துக்குள் யாத்திரிகர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள 580 வீடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் பலர் இப்பொழுது கூடாரங்களை அமைத்து தங்கி இருக்கின்றனர்.
இன்றைய நிலையை பார்க்கும் போது மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் 29 ந் திகதியிலிருந்து 3 ந் திகதி வரை விடுமுறை தினங்களாக இருப்பதால் அதிகமான சனத்தொகை இவ்விழாவுக்கு வருகை தருவதாக தெரியவருகின்றது.
ஆகவே இவ் திருவிழாவுக்கான ஒழுங்குகளை சரியான முறையில் ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் உண்டு.

ஆகவே அரச மற்றும் ஏனையவர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
இதையிட்டு மாவட்ட அரசாங்க அதிபரின் திட்டங்களுக்கு கீழ் யாவரும் சிறப்பான ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என நினைக்கின்றேன்.

மேலும் மடுத் திருப்பதிக்கு யாத்திரிகர்களாக வருவோர் இங்கு வழிபாடுகள் நடைபெறுகிற  போது  வீடுகளில் அல்லது கூடாரங்களில் இருந்து உங்கள் பொழுதுபோக்கு தவிர்த்துக் கொள்ளுங்கள்.
பெருவிழாவுக்கு முதல் நாள் அதாவது ஆடி மாதம் முதலாம் திகதி மாலை ஆராதனை 6 மணிக்கு செபமாலையுடன் ஆரம்பமாகும்.

இதன்பின் திவ்விய நற்கருணை ஆராதனையுடன் இதன் பவனியும் ஆசீரும் இடம்பெறும். 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பெருவிழா  காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும் இதைத் தொடர்ந்து 6.15 மணிக்கு ஆயர்களின் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.

இதைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சுரூப பவனியும் ஆசீரும் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page