உலகம் செய்தி

அமெரிக்கப் பயணத்தை ஒத்திவைத்த லெபனான் பிரதமர்

லெபனானின் தற்போதைய உள்நாட்டு நிலையை கருத்திற்கொண்டு, தனது அமெரிக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக பிரதமர் நவாஃப் சலாம் அறிவித்துள்ளார்.

அடுத்த வாரம் அமெரிக்காவில் இஸ்ரேல் மற்றும் லெபனான் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த முடிவு வெளியாகியுள்ளது.

இதேவேளை, ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய லெபனான் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் ஃபத்லல்லா, லெபனான்–இஸ்ரேல் நேரடி பேச்சுவார்த்தைகளை அந்த அமைப்பு நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை தேசிய ஒப்பந்தம், அரசியலமைப்பு மற்றும் சட்டங்களுக்கு எதிரானது என்றும், இது நாட்டின் உள்நாட்டு ஒருமைப்பாட்டை பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி